Monday, November 15, 2010

மக்களோடு மக்களாக நடந்து சென்ற மத்தியப் பிரதேச முதல்வர்

புர்ஹன்பூர், நவ.14: மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தபதி சரவணமேளாவில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மக்களோடு வெள்ளிக்கிழமை நடந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க புர்ஹன்பூர் நகருக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீர் வருகை தந்தார் சிவராஜ் சிங் செüகான்.
அவரது வருகை குறித்து எவ்வித முன்னறிவிப்பும் செய்யப்படாததால் அது யாருக்கும் தெரியவில்லை. மக்களோடு மக்களாக நடந்து சென்ற அவர் அங்குள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
இந்தப் பயணத்தின்போது மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக புர்ஹன்பூர் நகருக்கு 56 கோடியை ஒதுக்கினார். இதேபோல் பை-பாஸ் சாலை அமைப்பதற்கும் அனுமதி வழங்கினார்.
மேலும் மொஹலாயர் ஆண்ட பாரம்பரியமிக்க இந்த நகரில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டங்களை தீட்டும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


நன்றி , தினமணி

No comments:

Post a Comment