Sunday, October 31, 2010

பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி?




பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இங்கு நாங்கள் வீரசபதம் எடுத்துள்ளோம். தி.மு.க., அரசை நீக்க பா.ஜ., முழுமையாக செயல்படும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.அது அரசியல் எழுச்சியாக மாறவேண்டும். அதற்கான முயற்சியை செய்வோம்.தேர்தலில் எங்கள் சொந்த பலத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் தேசியம், தெய்வீகம் கொண்ட ஆட்சி அமையும். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்ககோரி, நவ.19ல் சென்னை திருவெற்றியூரில் "தாமரை யாத்திரை 'தொடங்குகிறோம். என்றார்.

No comments:

Post a Comment