
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் 11 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் பா.ஜ.,வுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை வரவேற்கிறேன். கட்சி மாறிகளுக்கு கிடைத்த சரியான பாடம் இது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கவர்னர் பரத்வாஜ், தன் கடமையை நேர்மையாக செய்ய தவறிவிட்டார். எனவே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை வாபஸ் பெற்று கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் மீது மரியாதை இருந்தால், கவர்னர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றால், கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ள வேண்டும். பா.ஜ., அரசு மக்கள் அபிவிருத்தி பணிகளை திறம்பட செய்து வருகிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
No comments:
Post a Comment