Sunday, October 31, 2010

Bjp 3 days camp at chengelpet


click here

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு காங்கிரஸ், ம.ஜனதாதளத்துக்கு விழுந்த அடி: வெங்கய்ய நாயுடு



பெங்களூர், அக்.29: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு முகத்தில் விழுந்த அடி என்று பாஜக மூத்த துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு குறித்து வெங்கய்ய நாயுடு கூறியதாவது: சத்தியமேவ ஜெயதே என்பதற்கு இணங்க, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைத்தலைவர் போப்பையாவின் உத்தரவை

உயர்நீதிமன்றம் ஆமோதித்துள்ளது.

இது மகத்தான தீர்ப்பு. உண்மைக்கு என்றும் அழிவில்லை என்பதை இந்தத்தீர்ப்பு நிலைநாட்டி உள்ளது. தென் மாநிலத்தில் கர்நாடகத்தில் முதன்முதலாக அமைந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்ற சதித்திட்டம் தில்லியில் உருவானது. அதை கர்நாடகத்தில் காங்கிரஸ் பின்னணியில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி நிறைவேற்ற முற்பட்டு கையை சுட்டுக் கொண்டுவிட்டார்.

இந்த சதியின் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சி. கட்சி விரோத நடவடிக்கையில்

ஈடுபடுவோருக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதுநாட்டிற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்தத்தீர்ப்பு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளின் முகத்தில் விழுந்த பெரிய அடியாகும். 27 எம்எல்ஏக்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் எப்படியும் எடியூரப்பா தலைமையிலான அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று இரவு-பகல் தூக்கமின்றி

சுற்றிக் கொண்டிருக்கிறார் குமாரசாமி. அவரது முயற்சிக்கு என்றைக்கும் வெற்றி கிடைக்காது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிடும் என பாஜக அதிருப்தியாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் பாஜகவில் மீண்டும் இணைய முயற்சி செய்தனர். அது தடுக்கப்பட்டது. அவர்களை எந்தக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பாஜகவில் சேர்க்க மாட்டோம் என்றார் அவர்.

மாநில பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா கூறியதாவது: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும், கட்சி கட்டுப்பாட்டை மீறுவோருக்கும் இதே கதிதான் ஏற்படும் என்பதற்கு 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. கட்சியில் கட்டுப்பாடுதான் முக்கியம். நான்கு பேர் சேர்ந்து கொண்டால் கட்சியையே வளைக்கலாம், தமது விருப்பப்படி நடத்தலாம் என்று கருதுவோருக்கு தக்க பாடமாக இந்தத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றார்.

பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி?




பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இங்கு நாங்கள் வீரசபதம் எடுத்துள்ளோம். தி.மு.க., அரசை நீக்க பா.ஜ., முழுமையாக செயல்படும். இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்.அது அரசியல் எழுச்சியாக மாறவேண்டும். அதற்கான முயற்சியை செய்வோம்.தேர்தலில் எங்கள் சொந்த பலத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் தேசியம், தெய்வீகம் கொண்ட ஆட்சி அமையும். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்ககோரி, நவ.19ல் சென்னை திருவெற்றியூரில் "தாமரை யாத்திரை 'தொடங்குகிறோம். என்றார்.

கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பா? முதல்வர் எடியூரப்பா தகவல்



பெங்களூரு: ""கர்நாடக அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து, நவம்பர் 3ம் தேதி மைசூரில் நடக்கும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்,'' என முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.



ஹூப்ளியில் ஒரு விவசாயி இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி இருப்பதற்கு, முதல்வர் எடியூரப்பா அங்கு புறப்பட்டார். முன்னதாக பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும். நவம்பர் 3ம் தேதியன்று மைசூரில் பா.ஜ., செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில், அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து ஆலோசிக்கப்படும். அமைச்சரவையை முழு அளவில் விஸ்தரிப்பதா அல்லது இரண்டு, மூன்று பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, மற்ற இடங்களை விட்டு வைப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.



மாநில அபிவிருத்திகள் மற்றும் நடக்கவுள்ள ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்களுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டியுள்ளது. இந்த தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபடி நடக்கவுள்ளது. கட்சியை வெற்றி பாதையில் நடத்திச் செல்லும் பொறுப்பு, கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள், தொண்டர்களைச் சேர்ந்தது. மாநிலம் வளர்ச்சியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதை மத்திய திட்ட ஆணையமே கூறியுள்ளது. இதை உணர்ந்த பின்னராவது, எதிர்க்கட்சிகள் அபிவிருத்தி விஷயங்களில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இன்னும் அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு, மாநில மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.



இதே வேளையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். போட்டி எம்.எல்.ஏ.,க்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு பின்னர் கட்சிக்கு ஆதரவளித்த வர்த்தூர் பிரகாஷ், நரசிம்ம நாயக் ஆகியோர் அமைச்சராவது நிச்சயம் என கூறப்படுகிறது. இவர்களுடன் சிக்மகளூரு மாவட்டத்திலிருந்து அமைச்சராக எம்.எல்.ஏ., சி.டி.ரவி, ஜீவராஜுக்கிடையே போட்டி நடந்து வருகிறது. குடகிலிருந்து எம்.எல்.ஏ., அப்பச்சு ரஞ்சனும் அமைச்சராக முயற்சித்து வருகிறார். அமைச்சரவையில் ஆறு பேருக்கு வாய்ப்பளிக்க வழி இருப்பினும், நான்கு பேரை மட்டுமே தற்போதைக்கு சேர்த்துக் கொண்டு, பின்னர் நிலைமையை அறிந்து மற்ற இரு இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளதாக பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவர்னர் பரத்வாஜ் ராஜினாமா செய்ய வேண்டும்: வெங்கையா நாயுடு கோரிக்கை



பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் 11 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் பா.ஜ.,வுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை வரவேற்கிறேன். கட்சி மாறிகளுக்கு கிடைத்த சரியான பாடம் இது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கவர்னர் பரத்வாஜ், தன் கடமையை நேர்மையாக செய்ய தவறிவிட்டார். எனவே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை வாபஸ் பெற்று கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் மீது மரியாதை இருந்தால், கவர்னர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றால், கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற்று கொள்ள வேண்டும். பா.ஜ., அரசு மக்கள் அபிவிருத்தி பணிகளை திறம்பட செய்து வருகிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.