நாகர்கோவில் நகரமே குலுங்கியது !
குமரி மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ஜூலை போராட்டத்தில் லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.இந்த கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது . மாலை சுமார் 3 .00 மணிக்கு ஆரம்பிக்கும் என்று அறிவிப்பால் 2 மணிக்கே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தார்கள் . இக்கூட்ட்டதிற்கு மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் தலைமை ஏற்று நடத்தினார் ,பாஜக வின் முன்னால் குமரி மாவட்ட தலைவர் திரு.M .R .காந்தி மாநில துணை தலைவர்கள் திரு .H .ராஜா,திருமதி .தமிழிசை சௌந்தரராஜன் .முன்னால் தலைவர் இல .கணேசன் , பாஜக அகில இந்திய செய்தி தொடர்பாளர் திருமதி.நிர்மலா சீதாராமன் மற்றும் இந்த முன்னணியின் மாநில நிறுவன தலைவர் வீரத்துறவி அய்யா ராம.கோபாலன் பேசினார்கள் . கடைசியாக பேசிய வாழும் இளைய காமராஜர் .பொன்.ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கும் கல்வி ஊக்கதொகை அரசாங்கம் தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் தேவைபட்டால் வீடு வீடாக சென்று கூட நான் போராடுவேன் என்று பேசினார். வடசேரி அண்ணா சிலையில் இருந்து டவர் ஜங்ஷன் வரை தார் சாலையில் தார், சாலையோர மண் தெரியாத அளவிற்கு பாஜக தொண்டர்கள் நெருக்கமாக அமர்ந்து இருந்தனர் . திரளான அளவில் மகளிர் மற்றும் பெரும் அளவில் மாணவர்களும் கலந்து கொண்டது ஆர்பாட்டத்தின் சிறப்பு. கூட்டம் அமைதியாகவும் , கட்டுப்பாடுடன் நடைபெற்றது அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியது . கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு இங்கே click here
ஆர்பாட்டத்தின் வீடியோ காட்சிகள் :
______________
No comments:
Post a Comment